Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டின் அரசியலமைப்பின் மீது பா.ஜ.க. தாக்குதல் நடத்தி வருவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
 காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் இன்று வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்காக புதுடெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

அங்கு அவர் பேசும் போது, “பா.ஜ.க.வால் அரசியலமைப்பு தாக்கப்பட்டு வருகிறது. அரசியலமைப்பினை பாதுகாக்க வேண்டியது, ஒவ்வொரு தனி நபரின் வருங்காலதினை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அரசியல் பலனடைவதற்காக ஒரு பொய்யை பயன்படுத்தி கொள்ளலாம் என்பது பா.ஜ.க.வின் அடிப்படை விசயம் ஆக உள்ளது. நாம் துன்புறுகிறோமோ அல்லது தோல்வி அடைகிறோமோ, நாம் உண்மையை விட்டு விட கூடாது.” என்றுள்ளது.

0 Responses to பா.ஜ.க. அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்துகிறது: ராகுல் காந்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com