இந்தியப் படை அதிகாரிகள் குழு சிறீலங்காப் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது.
சந்திப்பானது நேற்று திங்கட்கிழமை மாலை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இந்திய படை அதிகாரிகள் குழுவில் பிரிகேடியர் மொனி சாண்டி தலைமையில் தரைப்படையினர் மற்றும் வான்படை அதிகாரிகளும் உள்ளடங்கிய 14 பேர் வருகை சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
சந்திப்பில் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்தும், நாட்டின் பாதுகாப்புக்காக படையினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், 30 வருடமாக இருந்துவந்த பயங்கரவாதப் பிரச்சினைகள் குறித்து உரையாடப்பட்டுள்ளது.



0 Responses to இந்திய படை அதிகாரிகள் குழு கோத்தபாய சந்திப்பு