Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ தேசத்தின் விடிவிற்காய் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களையும், சிங்கள இனவாத அரசபடையினரால் படுகொலை செய்யப்பட்ட மக்களையும் நினைவு கூர்ந்து இத்தாலி, பலெர்மோவில் நேற்று அஞ்சலி நிகழ்வு நடாத்ததப்பட்டது.

ஈழ தேசத்தின் விடிவிற்கான பயணத்தில் தம்மை கொடையாக தந்த எம் மாவீரர்களையும் தோளோடு தோள் நின்று சிங்கள இனவாத அரசின் கோரத்தாண்டவத்தில் பலியான மக்களையும் நினைவு கூர்ந்து, இத்தாலி நாட்டின் பலெர்மோ வாழ் அனைத்து தமிழ் கத்தோலிக்க மக்களினால் விசேட வணக்க அஞ்சலியும், மெழுகுவர்த்தி தீபச்சுடர் ஆராதனையுடன் வணக்க அஞ்சலியும் நேற்று 21-11-2009 இரவு 8:00 மணிக்கு பியாட்சா சன் டொமினிக் தேவாலத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இத் திருப்பலியிலும் அஞ்சலி நிகழ்விலும் பலெர்மோ வாழ் பெருமளவான தமிழ்மக்கள் கலந்து கொண்டு ஆராதனையில் ஈடுபட்டனார்.

0 Responses to இத்தாலி, பலெர்மோவில் மாவீரர் வணக்க அஞ்சலியும் திருப்பலியும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com