Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ மக்கள் இழந்தஉரிமைகளை மீட்டெடுப்பதற்காக, இதுவரை தங்கள் இன்னுயிர்களை ஈகம்செய்த தமிழீழத் தேசிய மாவீரர்களை நினைவுகூர்ந்து, மாவீரர் வாரமான இவ்வாரத்தில் நெதர்லாந்திலுள்ள இந்து, கிறீஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதன்படி நெதர்லாந்திலுள்ள றோர்மொன்ட், கேர்லென் நகரமுருகன் கோவில்களிலும் சைஸ்ற் நகரத் தேவாலயத்திலும் சிறப்புப் பூஜைகள் தமிழ்மக்களால் நடாத்தப்பட்டுள்ளன.

இப்பூசைகளில் பெருமளவான தமிழ்மக்கள் கலந்துகொண்டு மாவீரர்களிற்கான ஒளியேற்றல்களையும் சிறப்புப் பிரார்த்தனைகளையும் நடாத்தி, தேசிய மாவீரர்களை நினைவு கூர்ந்துள்ளனர்.

0 Responses to நெதர்லாந்தில் நடைபெற்ற மாவீரர் சிறப்புப்பூசைகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com