Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனக்கொலைப் போரைத் தடுத்த நிறுத்து வலியுறுத்தி மாவீரன் முத்துக்குமார் மற்றும் 17 பேர் 2009ஆம் ஆண்டு தங்கள் தேகங்களைத் தீக்கிரையாக்கி ஈகம் செய்தனர்.

முத்துக்குமார் உள்ளிட்ட இத்தியாகிகளை நினைவு கூர்ந்து வீரவணக்க சுடரோட்டம் - பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் 30.01.10 அன்று நடத்த திட்டமிட்டிருந்தோம். இக்கூட்டத்திற்குக் காவல்துறை அனுமதி மதுத்துத் தடை விதித்துள்ளது.

நினைவேந்தல் கூட்டத்திற்குக் கூட காவல்துறை தடை விதிப்பது - அதுவும் இதே வகைக் கூட்டங்களுக்கு எங்கள் கட்சிக்கும், பிற அமைப்பினருக்கும் தமிழகம் முழுவதும் அனுமதி வழங்கப்பட்டிருக்கும் போது சிதம்பரத்தில் மட்டும் தடை விதிப்பது வியப்பையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

காவல்துறையின் இச்செயல் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை சனநாயக உரிமையை மறுக்கும் செயலாகும். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். இத்தடையாணைக்கு எதிராக சென்னை, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளோம். நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு வேறொரு நாளில் இக்கூட்டம் நடைபெறும்.

எனவே, 30.01.2010 அன்று நடப்பதாக இருந்த மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க சுடரோட்டம், பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.

தோழமையுடன்,

கி.வெங்கட்ராமன்,

தலைமைச் செயற்குழுஉறுப்பினர்,

தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி

0 Responses to சிதம்பரத்தில் முத்துக்குமார் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com