Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தொலைபேசியில் டக்ளஸ்சை திட்டிய பசில்

பதிந்தவர்: தம்பியன் 31 January 2010

ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் மகிந்தவை ஆதரிக்காமல் புறக்கணித்ததும், வடகிழக்கில் மகிந்த படுதோல்வியடைந்ததும் யாவரும் அறிந்ததே. இதைத் தொடர்ந்து தற்போது யாழில் தங்கியிருக்கும் டக்ளஸை தொடர்புகொண்ட பசில் அறமுறைய திட்டித் தீர்த்துள்ளார். நீரும் ஒரு மனிசனா யாழில் சிறு பகுதியில் கூட உமது கட்சியால் வெல்லமுடியவில்லையே, கட்சியைக் கலைத்துவிட்டு வீட்டிற்குப் போகலாம் என திட்டியுள்ளதாக, அவரின் கட்சித் தொண்டர் வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது. உம்மை நம்பியதை விட தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி இருந்தால் நாம் வென்றிருப்போம் எனவும் பல தகாத வார்த்தைகளாலும் பசில் டக்ளஸை திட்டித் தீர்த்துள்ளார்.

இதனை அடுத்து தாம் தனது பதவியை இராஜினாமா செய்வதாக டக்ளஸ் பெரும் பீலா ஒன்றை அரங்கேற்றினார். காலையில் அவ்வாறு அறிவித்த அவர் மாலையில் தனது முடிவை மாத்துவதாக அறிவித்துள்ளார். தம்முடன் மகிந்த தொடர்புகொண்டு தமது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டதாகவும், உடனே டக்ளஸ் அதனை மறு பரிசீலனை செய்து முடிவை மாற்றிக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார். இந்த சைக்கிள் கப்பில் சில தொண்டர்கள் இந்திய அரசியல் பாணியில் யாழ்ப்பாணத்தில் கடைகளை மூடச்சொல்லியும், ஒரு பேருந்தை தீவைத்தும் கொழுத்தியுள்ளனர்.

இதனிடையே பீ.பீ.சி தமிழோசைக்கு டக்ளஸ் வழங்கிய பேட்டியில், தன் மீது நம்பிக்கை வைத்து தமிழ் மக்களை வாக்களிக்குமாறு தாம் கூறியிருந்ததாகவும், ஆனால் தமிழர்கள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்றும் நொந்துள்ளார். இதன் மூலம் அவரே தமிழ் மக்கள் தம்மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பதை தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் கட்டித் தழுவியவர்கள் தற்போது எதிரும் புதிருமாக இருக்கிறார்கள் எனப்தே ஜதார்த்தம் ! தற்போது இவர் கட்சியின் சின்னமான வீணை சோக கீதங்களையே வாசிக்கிறது..போலும்...

1 Response to தொலைபேசியில் டக்ளஸ்சை திட்டிய பசில்

  1. முதலில் கஞ்சி பிறகு சோறு அதன்பின் பிரியாணி என்று தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கொச்சைப்படுத்தியவருக்கு தமிழ் மக்கள் நல்ல பதில் அளித்துள்ளார்கள்.ஈழம் வாழ் தமிழர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் .

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com