Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நெதர்லாந்தில் நேற்று (31.01.2010) வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் 1ம் ஆண்டு நினைவுவணக்கம் "ரொத்தர்டாம்" நகரில் நடைபெற்றது. இதில் முத்துக்குமார் அவர்களின் நிழற்படம் வைக்கப்பட்டு, அகவணக்கம், மலர்வணக்கம் அங்கு வந்திருந்த மக்களால் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து கவிவணக்கமும் நினைவுரையும் நிகழ்த்தப்பட்டது. இந்நினைவுரையில், கடைசிக்கட்ட ஈழப்போரில் சிங்களஅரசால் நடாத்தி முடிக்கப்பட்ட மாபெரும் தமிழினப் படுகொலைகளை தடுத்திநிறுத்திட, வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் உட்பட பல தமிழக, மலேசிய, ஈழத்தமிழ் உறவுகள் தீக்குளித்து தங்கள் உன்னத உயிர்களை அர்ப்பணித்துள்ளனர் எனவும், இத்தியாகங்களை நாம் என்றென்றும் நினைவுகூறுவதுடன் மட்டும் நின்றுவிடாது, இவர்கள் தங்கள் உடலில் சுமந்த நெருப்பை நாங்கள் எங்கள் உள்ளத்தில் சுமந்து, இத்தியாகங்களை யாரும் ஏமாற்றி விற்றுவிடாமல் மக்கள் விழிப்புடன் இருந்து சுதந்திரத் தமிழீழத்தனியரசை நிறுவுவதில் தொடர்ந்தும் உறுதியாக தங்கள் பங்கை ஆற்றவேண்டும் எனவும், எங்கள் பிள்ளைகளிற்கு எமது சுதந்திரப்போராட்டத்தின் உண்மைகளையும் நியாயங்களையும் கூறிவளர்க்கவேண்டும் எனவும் எடுத்துவிளக்கப்பட்டது.

நெருப்பில் குளித்தவர்களின் நினைவுவணக்கத்தில் கூடியிருக்கும் நாம், எங்கள் உள்ளத்தில் விடுதலைநெருப்பைச்சுமந்து, மாவீரர்களின் தியாகத்தால் உயிர்கொடுத்து வளர்க்கப்பட்ட இவ்விடுதலைத்தீயை, அணைந்து விடாமலும் சில தீயசக்திகளினால் அணைக்கப்பட்டுவிடாமலும் பாதுகாக்கவேண்டிய பாரியபொறுப்பு புலம்பெயர்வாழ் தமிழர்களிடம் வரலாறு ஒப்படைத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு இவ்வணக்கநிகழ்வு நிறைவுசெய்யப்பட்டது.



0 Responses to நெதர்லாந்தில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு வணக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com