Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

10.10.2010அன்று யேர்மனியில் Essen மாநிலத்தில் ஈழத்தமிழர் மக்கள் அவையை அமைப்பதற்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இவ் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் மதிப்புக்குரிய அருட்தந்தை Emmanuel அவர்கள் கலந்துகொண்டார்.

அத்தோடு இக் கூட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகை தந்து சிறப்பித்தனர்.

அகவணக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இக் கூட்டத்தில் முதலாவதாக ஈழத்தமிழர் மக்கள் அவையின் உருவாக்கம் பற்றியும் முக்கிய நோக்கங்களும் மற்றும் செயற்பாடுகள் பற்றியும் மக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர் அருட்தந்தை Emmanuel அவர்கள் தனது சிறப்புரையின் போது புலம்பெயர் மக்களின் தற்போதைய நிலைமையை கவனத்திற்கொண்டு அவர்களுக்கு மிக தெளிவான கருத்துக்களை முன்வைத்து எங்கள் இலட்சிய பாதையில் எத்தகைய இடையூறுகள் வந்தாலும் ஒன்றுபட்டு அனைத்து மக்களும் செயற்பட வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார்.

இன்று யேர்மனியில் உருவாக்கப்படவிருக்கும் ஈழத்தமிழர் மக்கள் அவை அரசியல் மட்டும் அல்லாது மிக முக்கியமாக தமிழீழத்தில் அல்லல்படும் மக்களையும் அத்தோடு இங்கு வாழும் தமிழ் மக்களின் சமூக, சமுதாய விவகாரங்களிலும் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து மக்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டது. சிறப்பாக நாடுகடந்த அரசாங்கத்திற்கும் யேர்மனியில் உருவாக்கப்படும் ஈழத்தமிழர் மக்கள் அவை பற்றிய கேள்விகள் முன்வைக்கப்பட்டது.

இதற்கு தமிழீழ இலட்சியத்தை நோக்கிய பாதையில் இரண்டும் பக்கபலமாக ஒற்றுமையாக இயங்கவேண்டும் என்பதே நோக்கம் என்று கூறப்பட்டது.

யேர்மனியில் ஈழத்தமிழர் மக்கள் அவையை உருவாக்குவதற்கான 7 நபர் கொண்ட செயற்குழு அமைக்கப்பட்டது. இதில் சிறப்பாக இளம் சமுதாயத்தினர் கூடுதலாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டனர்.

யேர்மனியில் ஈழத்தமிழர் மக்கள் அவையை உருவாக்குவதற்கான செயற்குழு உறுப்பினர்களின் விபரங்கள் பின்வருமாறு:

சுயாதா முருகதாஸ்,
கிருசாந்தி பாலசுப்பிரமணியம்,
பிரணா புண்ணியமூர்த்தி,
முகுந்தன் இந்திரலிங்கம்,
தி. லம்பேட்,
திருச்செல்வம் நடராஜா,
ஜெயசங்கர் கோபாலபிள்ளை.

இச் செயற்குழுவின் ஆலோசகராக தம்பிஐயா தன்மவரதர் தெரிவுசெய்யப்பட்டார்.

இறுதியாக அனைத்து மக்களும் தம் அவையை சிறப்பாக உருவாக்குவதற்கு முழு ஆதரவு வழங்கியதோடு நிதிப்பங்களிப்பும் தாமாக முன்வந்து செய்திருந்தனர்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to யேர்மனியில் நடைபெற்ற ஈழத்தமிழர் மக்கள் அவைக்கான பொதுக்கூட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com