Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பேர்லின் நகரை நோக்கிய மிதிவண்டிப்பயணம், இன்று 10வது நாளாகவும் தொடர்கின்றது. இன்று காலை 9:15 மணியளவில் மாக்டபுர்க் (Magdeburg) நகரிலிருந்து ஆரம்பித்த பயணம் மாலை 17:40 மணியளவில் Potsdam நகரை அடைந்தது. இன்றைய பயணம் மிகவும் கடினமாக அமைந்திருந்ததாக மிதிவண்டிப்பயணம் மேற்கொள்ளும் உறவுகள் தெரிவித்தனர்.

கடும் மழை, காற்று மற்றும் குளிர் காரணமாக மெதுவாக நடைபெற்ற போதும் 118கிமீ தூரத்தை இன்று மாலை கடந்திருந்தனர். உடல் உபாதைகள் அவர்களை தாக்கிய போதும் சற்றும் மனம் தளராது வீரியத்துடன் தமது இலக்கை அவர்கள் அடைந்திருந்தனர்.

பேர்லின் நகரை அடைவதற்கு இன்னமும் 30கிமீ தூரத்தை கடக்க வேண்டியிருப்பதாகவும், நாளை மற்றும் மறுதினம் பேர்லின் நகரத்தின் முக்கிய பிரதிநிதிகளைச் சந்திக்கவிருப்பதாகவும், வெள்ளிக்கிழமை 22.10.2010அன்று 12 மணிக்கு, Brandenburger Tor – Pariser Platz, 10117 Berlin10117 இல் நடைபெறவிருக்கும் ஒன்றுகூடல் நிகழ்வில் அனைத்து யேர்மன் வாழ் தமிழ் மக்களும் இணைந்துகொள்ளுமாறும் மிதிவண்டிப்பயணம் மேற்கொள்ளும் உறவுகள் தெரிவிக்கின்றார்கள்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to பேர்லின் நகரை நோக்கிய மிதிவண்டிப்பயணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com