Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகள் எவ்வாறு கனடா செல்கிறார்கள் என்பதை CBC கனேடிய தொலைக்காட்சி நிருபர் ஆராய்ந்துள்ளார். அவர் நேரடியாக சென்னை சென்று அங்கு கனடாவுக்கு கப்பல் மூலம் செல்லவிருக்கும் அகதிகளை பேட்டி எடுத்து, பாரிய உயிராபத்துக்கு மத்தியில் நீங்கள் எவ்வாறு பயணம் செய்கிறீர்கள் என வினவியுள்ளார்.

விடுதலைப் புலிகளே இந்த ஆட்கடத்தலில் ஈடுபடுவதாக இலங்கை அரசு தொடர்ந்தும் குற்றஞ்சாட்டிவருகிற நிலையில், விடுதலைப் புலிகளுக்கும், கனடாவுக்கு ஆட்களை கடத்துவோருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என அகதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு நின்றுவிடாது, விடுதலைப் புலிகள் ஒரு போராட்ட இயக்கம் எனவும், அவர்கள் பல உயிர்களை விடுதலைக்காக அர்பணித்துள்ளதாகவும் கனேடிய தொலைக்காட்சிக்கு அகதிகள் கூறியுள்ளனர். தான் கனடாவுக்குள் சென்றால், அம் மக்களோடு இணைந்து வாழ்வோம் என்றும், தமிழர்கள் உலகிலேயே மிகக் கடுமையாக உழைக்கும் வர்க்கம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

அதிர்வு
மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to விடுதலைப் புலிகள் எங்களை நாடுகடத்தவில்லை: அகதிகள் பேட்டி (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com