Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

14.11.2010 அன்று அம்பத்தூர் பகுதியில் நாம் தமிழர் கட்சின் அரசியல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. காலை 9 மணிக்கு பேராசிரியர் மருதமுத்து அவர்களால் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முதலாக சமீபத்தில் மறைந்த நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் மதிவாணன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அடிப்படை அரசியல் என்றால் என்ன? என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிலரங்கத்தில் மருதமுத்து அவர்கள் விளக்கியதையடுத்து, கட்ச்சியினரின் சந்தேங்கங்களுக்கு பதிலளித்தார்.இந்த பயிலரங்கத்தில் பேராசிரியர் ராமசாமி,அமுதா நம்பி,ஆனந்தராசு,அரிமா நாதன், திலீபன்,ஜெயபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த அரசியல் பயிற்சி வகுப்புக்கான ஏற்பாடுகளை நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர்களில் ஒருவரான அன்பு தென்னரசு செய்திருந்தார். இந்த பயிற்சி வகுப்பில் பெரும்பாலான நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.

0 Responses to 14.11 ..2010 அன்று அம்பத்தூர் பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் அரசியல் பயிற்சி வகுப்பு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com