25 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் இலங்கை அமைச்சர் டக்டஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் இலங்கைக்கு தப்பிச் சென்றார். இதுதொடர்பான வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் டக்டஸ் தேவானந்தாவை கைது செய்யக்கோரி வழக்கறிஞர் புகழேந்தி மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.



0 Responses to டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி மனு: விசாரணைக்கு ஏற்றது ஐகோர்ட்