Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிலிப்பைன்ஸ் நாட்டில் சமாதானத்திற்கான குஸி விருது வென்ற யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதியைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் யாழ்.கத்தோலிக்க அச்சக மண்டபத்தில் நடைபெற்றது. குஸி விருதுவென்ற யாழ் மாவட்ட தளபதியை இமெல்டா குஷிப்படுத்தியுள்ளாரம்.

தொடர்ந்து பேசிய இமெல்டா யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவி வரும் சமாதானத்தை சீர்குலைக்க எவரையும் அனுமதிக்க மாட்டோம். அமைதியை குலைக்கும் இவ்விடயத்தில் எவருக்கும் மன்னிப்போ கருணையோ வழங்கப்படமாட்டாது என்று சூளுரைத்துள்ளார். வெளிநாட்டில் இயங்கி வரும் இணையங்களைத் தாக்கிப் பேசிய அவர், யாழ் நிலை புரியாமல் புலம்பெயர் மக்கள் தேவையில்லாத போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார்.

பின்னர் யாழ் மாவட்ட தளபதியும் அரச அதிபரும் சேர்ந்து அரசி உரசி படத்தை எடுத்துக்கொண்டனர். பல மதகுருமார்களும் இதில் கலந்துகொண்டதாகவும் யாழ் மாவட்ட தளபதி தற்போது குஷியாக இருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இச் செய்தி அதிர்விலிருந்து...

0 Responses to யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கட்டளைத் தளபதிக்கு விருந்து (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com