Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் சிலை சில மேலதிக வேலைகளை பூர்த்திசெய்வதற்காக சிற்பிக்கூடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலைதொடர்பான வேலைகள் முழுமைப்படுத்தப்பட்டு, எதிர்வரும் சனவரி மாதம் முதல் வாரத்தில் மீள நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வேலை தொடர்பான செய்திகள் சிலை நிறுவும் முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புலம்பெயர்மக்களின் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கும் முயற்சியாகவும், மகிந்தரின் இலண்டன் பயணத்தின் தோல்விகளை மறைப்பதற்காகவும் இது தொடர்பான செய்திகளை சிறீலங்கா அரச ஊடகங்கள் திரிவுபடுத்தி பொய்ப்பிரச்சாரத்தினை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் சிலை மேலதிக வேலைகளுக்காக சிற்பிக்கூடத்தில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com