Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையர்களும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிச்சென்ற கப்பல் ஒன்று அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் கடலில் மூழ்கியுள்ளது.

இந்த விபத்தின் போது பலர் மரணமாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கப்பல் கிறிஸ்மஸ் தீவில் உள்ள மலை ஒன்றில் மோதிய நிலையிலேயே கடலில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் நீரில் மூழ்கிய போது அதில் 70 பேர் வரை இருந்துள்ளனர்.

இலங்கையர்கள் அதில் இருந்தார்களா? என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

விபத்தின் பின்னர் 40 பேர் கப்பலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில்; கடலில் மரணமான பெண்கள் மற்றும் சிறுவர்களின் சடலங்கள் காணப்படுவதாக மீட்புப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடல் கொந்தளிப்பு காரணமாகவே இந்த கப்பல் மலையில் மோதியதாக கிறிஸ்மஸ் தீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

0 Responses to கிறிஸ்மஸ் தீவில் மலை ஒன்றுடன் மோதிய கப்பல் (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com