Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை அரசின் கண்காட்சியில் வெடிகுண்டு

பதிந்தவர்: ஈழப்பிரியா 15 February 2011

சுதந்திர முன்னிட்டு அண்மையில் நடைபெற்ற தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்கான நுழைவாயிலின் அருகே வெடிகுண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது பாதுகாப்புத் தரப்பினரை உச்சகட்ட அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கண்காட்சி நுழைவாயிலுக்கான பிரதான பாதையின் அருகே பிரஸ்தாப வெடிகுண்டு கடந்த 13ம் திகதி மாலை பாதுகாப்புத் தரப்பினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து பல கோணங்களில் அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியைப் பார்வையிட வருகை தந்த முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து அந்த வெடிகுண்டு கொண்டுவரப்பட்டிருந்ததா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கண்காட்சி நடைபெற்ற நாட்களில் ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர்கள் கண்காட்சியைப் பார்வையிட வந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறான நிலையில் முக்கிய பிரமுகர்கள் வந்து சென்ற பாதையின் ஓரமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தற்போது பாதுகாப்புத் தரப்பினரை உச்சகட்ட அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் இதுவரை எந்தத் தகவலும் கிட்டவில்லை என்று தெரிய வருகின்றது.

0 Responses to இலங்கை அரசின் கண்காட்சியில் வெடிகுண்டு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com