Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வல்வையில் வைக்கப்பட்டுள்ள பார்வதி அம்மாளின் உடலத்துக்கு மக்கள் அஞ்சலி செலுத்த வரவில்லை என்பது ஒரு பெரும் குறையாக உள்ளது. பலர் இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு அஞ்சியும், அவர்கள் விடுக்கும் அச்சுறுத்தலுக்கு அஞ்சியும் செல்லாது உள்ளனர். அதுமட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரமுகர்கள் பலரும் அஞ்சலிக்குச் செல்லாது அதனைத் தவிர்த்தும் வருகின்றனர்.

ஒரு இனத்தின் விடுதலைக்குப் போராடிய தலைவரின் அன்னை என்ற ரீதியில் புலம்பெயர் நாடுகளில் அவருக்கும் பெரும் அஞ்சலி நிகழ்வுகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சொந்த ஊரில் அவருக்கான அஞ்சலி சரியாகச் செய்யப்படவில்லை என்பதே பெரும் குறையாக உள்ளது.

ஆனால் இவற்றை எல்லாம் கடந்து, ஒரு தாயார் தனது மனக்குமுறலை கொட்டித் தீர்த்துள்ளார். இலங்கை இராணுவத்தின் சுற்றிவளைப்பு, புலனாய்வுப் பிரிவினரின் பிரசன்னம் என்பவற்றை எல்லாம் மீறி, அவர் தான் சொல்லவந்ததை சொல்லித் தீர்த்துள்ளார்.

வட கிழக்கில் பொதுமக்கள் சிலர் என்ன சொல்ல முற்படுகிறார்களோ, சில பொதுமக்கள் என்ன நினைக்கிறார்களோ அதனை இந்தத் தாய் சொல்லித் தீர்த்துள்ளார். நிச்சயம் பார்க்கவேண்டிய காணொளி. இனியாவது பயந்து அடங்கிக் கிடக்கும் பொதுமக்கள் மத்தியில் ஒரு எழுச்சி வரட்டும். அடிமைத் தனம் உடையட்டும்.


அதிர்வு

1 Response to சிங்களப் பேய்களுக்கு பிரபாகரன் பெயர் சொல்ல என்ன தகுதி இருக்கிறது? ஒரு தாய்! (காணொளி)

  1. இந்தத் தாய்க்கு இருக்கும் வீரம் எமக்கில்லையே அவமானப் படுகின்றோம்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com