Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கிக் கொள்ளக் கோரி மிக விரைவில் வழக்கொன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

டென்மார்க்கின் பிரபல வழக்கறிஞர் விக்டர் கோப் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். அதற்கு ஆதாரமாக அவர் ஏராளம் வாதங்களை முன் வைக்கவும் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் சம உரிமை கொண்டவர்கள் என்ற நிலையில், .நா. சாசனம் மற்றும் சர்வதேசப் பிரகடனங்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடியவர்கள் என்ற ரீதியில் அந்த இயக்கத்தின் மீது தடை விதிக்க முடியாது என்பது அவர் முன் வைக்கும் பிரதான வாதமாகும்.

அந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடைசெய்ய எடுத்துள்ள தீர்மானம் தவறானது என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்து, தடையை நீக்கிக் கொள்ள வைப்பது விக்டர் ஹோப்பின் எதிர்பார்ப்பாக உள்ளது.

1 Response to விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடைக்கு எதிராக வழக்கு (காணொளி)

  1. Unknown Says:
  2. காலம் கடந்த ஜானம் என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மேலுள்ள தடையை ஐரோப்பிய ஒன்றியத்தை நீக்கவைப்பதன் மூலமும் அதேநேரத்தில் ஏனைய விடுதலைப் புலிகளைத் தடை செய்த நாடுகளையும் தடையை நீக்க அறவழியில், உலகச் சட்டங்களை மதித்து, அறிவின் துணை கொண்டு ஈழத்தமிழர்கள் போராடவேண்டும். இனிமேல் நமது விடுதலைப் போராட்டத்தை வன்முறை இன்றி, சட்டப்படி, சாத்வீகமாக, புத்தி ஜீவிகளின், சட்ட வல்லுனர்களின் உதவியுடன் முன்னெடுத்து வெற்றி வாகை சூட வேண்டும்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com