நல்லதோர் வீரம் செய்தே அதை
நலங்கெடப் புழுதியில் போட்டதென்றே
வல்லதோர் எம்தலைவன் தன்னை
வாழ்வுக்களித்தவர் போகவிட்டோம்
கொல்லுதே எம்விதியும் ஒரு
கொஞ்சமோ நெஞ்சமே நோகுதம்மா
வல்லமைதா தெய்வமே எம்
வாழ்வில் தொலைத்தது கோடியம்மா
சொல்லவோ ஆகுதில்லை ஒரு
சூரியன் தோன்றிய செந்தணலும் -இன்று
இல்லையோ எங்கள் மண்ணில் -நாம்
இங்கிட்டபாவங்கள் இன்னுமுண்டோ
எல்லையே இல்லை துன்பம் -எம்மை
எத்தனைநாள் இன்னும் தொட்டுவரும்
கல்லையோ நெஞ்சில் கொண்டு -அந்த
காக்கும் கடவுள் கண்மூடுதம்மா
எத்தனை துன்பப் பட்டாய் -அந்த
எத்தர்கள் வென்றதில் கொக்கரித்தே
சத்தியதேவன் அன்னை -உன்னை
சஞ்சல மிட்டிட செய்ததென்ன
உத்தமனாம் ஒருவன் -அயல்
உள்ளவன் போ என்று வஞ்சமிட்டான்
அத்தனையும் ஒருவன் அந்த
அனபுமகன் நின்றால் ஆகிடுமோ
நல்லவராய் நடித்தோர் நெஞ்சில்
நஞ்சுகள் இன்று வளர்ந்ததம்மா -இனிப்
பொல்லா உலகத்திலே -இந்தப்
பூமியில் நல்லவர்க் கேதுஇடம் -நீயும்
செல்லும் இடமறியோம் -ஆயின்
நல்ல அமைதிகொள், நாட்டினிலே கொடுந்
தொல்லை கனத்ததம்மா உன்
தூயமனம் வேண்டும் தூக்கமம்மா



0 Responses to தூங்குகிறாள் அன்னை - கிரிகாசன்