ஐ.நா. அறிக்கை நிரூபிக்கப்பட்டால் இந்தியா இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் என, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:
இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீது, மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக ஐ.நா.அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது நிரூபிக்கப்பட்டால், மத்திய அரசு தனது கண்டனத்தை இலங்கை அரசுக்கு தெரிவிக்கும்.
இந்தியாவைப் போல இலங்கையும் சுதந்திர நாடாகும். மற்ற நாடுகளின் பிரச்னையில் தலையிட முடியாது. இலங்கை அரசு தவறு செய்திருக்கிறது என்று நிரூபிக்கப்பட்டால் இந்தியா தனது கண்டனத்தை தெரிவிக்கும். தமிழக மீனவர்களைக் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.



0 Responses to ஐ.நா. அறிக்கை நிரூபிக்கப்பட்டால் இந்தியா இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்கும்: நா. சாமி