Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய அமைச்சர் .சிதம்பரம் ஊடாக புலிகள் குறித்த விபரங்களைத் திரட்டுவதற்காக மகிந்த, அவரது மனைவியைக் கையுக்குள் போட்டு வைத்திருந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இறுதிக்கட்ட போர் நடைபெற்றவேளை, புலிகளின் மனநிலை குறித்து அறியவும், அவர்கள் நிலைப்பாடு மற்றும் சில உள்ளக தகவல்களைத் திரட்ட மகிந்த ராஜபக்ஷ இந்திய அமைச்சர் சிதம்பரத்தை பயன்படுத்தியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் சிதம்பரத்தின் மனைவியான நளினியுடன் நெருங்கிய நட்புறவைப் பேணியதோடு, அவர் பெயரில் இருந்த நளினி தொழில் நிலைக்கூட்டு நிறுவனத்திற்கு இலங்கையின் எரிபொருள் அகழ்ந்தெடுக்கும் உரிமையை வழங்கியுள்ளார் என அறியப்படுகிறது.

நளினி கூட்டு நிறுவனம் அதன் உரிமையை பல கோடி இலஞ்சம் பெற்றுக் கொண்டு ரஸ்யாவிற்கும், மலேசியா ஊடாக சீனாவிற்கும் விற்றதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இச் செய்திகள் இந்தியாவில் இருந்து வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும். ஸ்பெக்ரம் ஊழல் தொடர்பாக ராசா அவர்கள் கைதான நிலையில், தற்போது காங்கிரஸ் அமைச்சர் .சிதம்பரத்தின் வண்டவாளங்களும் வெளியாகியுள்ளது. இறுதிக்கட்டப் போரில் தாம் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர முயல்வதுபோல சிதம்பரம் நாடகமாட, அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் தனது கள்ளத் தொடர்பான கனிமொழியோடு சேர்ந்து, போதாக்குறைக்கு காஸ்பர் அடிகளாரையும் இணைத்து பெரும் நாடகம் ஆடினர்.

புலிகளின் அரசியல் தலைவர்களான, .நடேசன், புலித்தேவன் ஆகியோருடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர். அதன்மூலமாக அவர்கள் பல விடையங்களை தெரிந்து அதனை சிதம்பரமூடாக மகிந்தவுக்குச் சொல்லுயும் உள்ளனர். இதற்காகவே மகிந்தர் இலங்கையில் எரிபொருள் அகழ்ந்தெடுக்கும் உரிமையையும் வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதைவிட மஹிந்த அரசாங்கம் காங்கிரஸ் அரசில் உள்ள பல இராஜதந்திரிகளுக்கு முதலீடுகளுக்கு இலங்கையில் நீண்டகால குத்தகைக்கு காணிகள் வழங்குதல், கறுப்புப் பணத்தை முதலீடாக மாற்றுதல், சீனா மற்றும் பல நாடுகளில் தொழில் ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொடுத்தல் ஆகிய உதவிகளை செய்து வருகின்றமையும் தற்போது தெரியவந்துள்ளது.

அதிர்வு

3 Responses to விடுதலைப் புலிகள் குறித்த தகவல் அறிய சிதம்பரத்தின் மனைவியை கையாண்ட மகிந்த

  1. பணத்திற்காக எதையும் விற்கும் வாங்கும் அசிங்கக் கூட்டம் இது.

     
  2. after all they are people who suck the blood of poor people in the name kanthuvatty

     
  3. Kallam oru naal maarum....

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com