Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ரோய் அவர்கள் தற்சமயம் லண்டன் வந்துள்ளார். இவர் ஈழத் தமிழர்களை லண்டனில் சந்திக்க நேரத்தை ஒதுக்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்திய அரசிற்கு சிம்மசொப்பனமாக இருக்கும் இவர், இந்தியா ஆதிவாசிகளைக் கொண்று குவித்து அவர்களின் காணிகளைக் கைப்பற்றி வருவதாக வெளிப்படையாகவே BBC தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

இந்தியா ஒருவகையில் தனது பூர்வீகக் குடிமக்களை இன அழிப்புச் செய்கிறது என்ற இவரது கூற்று, பல மேற்குலக நாடுகளை அதிர்சிக்கும் உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் இவர் ஈழத் தமிழர்களை லண்டனில் சந்திக்க நேரத்தை ஒதுக்கியுள்ளார். வரும் சனிக்கிழமை(11.06.2011) அன்று மதியம் 2.30க்கு சவுத்ஹால் (Southall) பகுதியில் இச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

தமிழ் புத்திஜீவிகளும், ஊடகவியலாளர்களும், மற்றும் பொதுமக்களும், இதில் கலந்துகொள்கின்றனர்.

சுமர் 65 ஆசனங்களே இம் மண்டபத்தில் இருப்பதால், இக் கலந்துரையாடலில் பங்குபற்ற விரும்புவோர் கீழ்காணும் தொலைபேசி எண் ஊடாக தொடர்புகொண்டு முன்பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

இக் கலந்துரையாடலில் இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு, போர் குற்ற விசாரணைகள், மற்றும் தமிழர்கள் எதிர்காலம் என்பன குறித்து ஆராயப்படவுள்ளதோடு, கருத்துப் பரிமற்றங்களும் நடைபெறவுள்ளது.

சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று, அருந்ததி ரோய் அவர்கள் இச்சந்திப்பில் கலந்துகொள்கிறார்.

உலகெங்கும் பரந்து வாழும் பல மனித உரிமை ஆர்வலர்கள், புத்திஜீவிகள் மற்றும் பன்நாட்டு ஊடகவியலாளர்களோடு சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் பல சந்திப்புகளை முன்னர் நடத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தொடர்புகளுக்கு:

கோபி: 0781 011 6032
கண்ணன்: 0787 331 4360
ஆனந்தி சுரியப்பிரகாசம்: 0208 543 7226
மின்னஞ்சல்: roy.meeting@gmail.com

0 Responses to லண்டனில் அருந்ததி ரோய் ஈழத் தமிழர்களை சந்திக்கவு​ள்ளார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com