Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் GTV யில் நடந்த வெளிச்சம் என்னும் நிகழ்ச்சியில் பிரித்தானியாவில் மாவீரர் தினத்தை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து விளக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

பிரித்தானியாவில் மாவீரர் தினத்தை தாமே நடத்துவோம் என விடாப்பிடியாக உள்ள 2 மனிதர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தாம் மக்களை தெளிவுபடுத்துவதாகக் கூறி மேலும் குழப்பிவிட்டுச் சென்றுள்ளனர்.

பிரித்தானியாவில் சுமார் 1990ம் ஆண்டு முதலே மாவீரர் தினம் சிறிய அளவில் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. பின்னர் மக்கள் வரவு அதிகரிக்க அது ஒரு மாபெரும் நிகழ்வாக உருவெடுத்துள்ளது. அதனை ஆண்டாண்டு காலமாக நடத்திவரும் செயல்பாட்டாளர்களைப் புறந்தள்ளிவிட்டு புதிய கோஷ்டி ஒன்று உருவாக்கப்பட்டு தற்போது தாமே மாவீரர் தினத்தை நடத்துவோம் என அவர்கள் போட்டி போட்டுக் கிளம்பியுள்ளனர்.

உடனடியாகவே அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது ஜி.ரிவி. இத் தொலைக்காட்சியின் வெளிச்சம் நிகழ்ச்சியில் தோன்றிய இத் திடீர் குழுவினர் தாம் மாவீரர் தினத்துக்காக அடித்து வைத்திருருக்கும் 20, 50, மற்றும் 100 பவுன்சுகளுக்கான டிக்கெட்டுக்களையும் காட்டி மக்களை பணம் தந்து உதவுமாறும் அழைப்புவிடுக்கின்றனர்.

முன்னதாக BTF இல் பணியாற்றி பின்னர் அங்கிருந்து GTFக்கு தாவி அதன் பின்னர் தாம் எங்கே நிற்கிறோம் என்ன செய்கிறோம் என்று தெரியாத சுகந்தன் என்பர் தொலைக்காட்சியில் தோன்றி தாமே மாவீரர் தினத்தை நடத்துவதாகச் சொல்கிறார். அதாவது மாவீரர் தினத்தை நடத்தினால் மக்கள் மத்தியில் பிரபல்யமாகலாம் என்பது இக் குழுவின் நினைப்பு. அதுமட்டுமல்லாது மாவீரர் தினத்தை பொருளாதார நோக்குடன் நடாத்தவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சரி விடையத்துக்கு வருவோம்! தொலைக்காட்சியில் முதல் பாதி நிகழ்ச்சி முடிந்து பின்னர் கேள்விநேரம் ஆரம்பமானது. அப்போது ஜேர்மனியில் இருந்து தொலைபேசியூடாக இணைந்த தமிழர் ஒருவர் மாவீரர் தினத்துக்கான அர்த்தம் என்ன? தேசிய தலைவரால் அதற்கு கொடுக்கப்பட்ட வரை முறை என்ன என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூற முடியாது சுகந்தன் திண்டாட ஒருவகையாக நிகழ்ச்சியின் அறிவிப்பாளர் திரு.தினேஷ் அவர்கள் அதனைச் சமாளித்துச் சென்றார். பின்னர் அதிர்வின் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சுகந்தன் பதில் கூறுகையில் இது நல்லதொரு கேள்வி என ஆரம்பித்து, பின்னர் போகப் போக ஊடகவியலாளரைத் திட்டித் தீர்த்தார். இப்படியான "கீழ் தரமான" கேள்விகளைக் கேட்கக்கூடாது என்று அநாகரீகமான முறையில் அவர் பதில் வழங்கியது ஒட்டுமொத்த தமிழ் ஊடகவியலாளர்களையும் அவமதிக்கு செயலாக அமைந்துள்ளது.

மக்கள் ஆனாலும் சரி ஒரு ஊடகவியலாளர் ஆனாலும் சரி கேள்வி கேட்டால் அதற்கு பதில் வழங்கித் தானே ஆகவேண்டும். அதற்குச் சம்மதித்துத் தானே நீங்கள் தொலைக்காட்சியில் தோன்றினீர்கள்? மக்களுக்கு சேவை செய்கிறேன் காசு கொடுத்தேன் என்று எல்லாம் நீங்கள் தொலைக்காட்சியில் பிதற்றலாம் ஆனால் மக்கள் கேள்விகேட்டால் மட்டும் பிடிக்காது என்றால் இது எந்த ஊர் ஞாயம்? சரி நிகழ்ச்சிக்கு வந்தவர் தான் இப்படிப் பேசுகிறார் என்றால் இதனைக் வழிநடத்தும் அறிவிப்பாளர் கூட இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது பெரும் வருத்தத்துக்குரிய விடையமாகும். இங்கே படத்தில் இருப்பவர் தான் சுகந்தன். தன்னிடம் யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்று நினைப்பவர். கேட்டால் அது கீழ் தரமான கேள்வியாக மாறிவிடுமாம்.

வெளிச்சம் நிகழ்ச்சியில் வந்ததால் தன் தலைக்கு பின்னால் ஒரு ஒளிவட்டம் தெரிவதாக இவர் நினைக்கிறார் போலும். இதற்கு காலம் பதில் செல்லும் ! தமிழ் மக்கள் பதில் சொல்வார்கள்!


அதிர்வு

2 Responses to GTV இன் வெளிச்சம் நிகழ்சியில் தெரிந்த ஒளிவட்டம்!

  1. kumaran Says:
  2. sariyana pody saval ungalitku ennudiyamanmartha nanrigal

     
  3. Ahilan Says:
  4. இவர்கள் எல்லாம் நாடு வீதியில் வைத்து சுடப்பட வேண்டியவர்கள்..............

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com