உடல் பருமன் அதிகரித்துள்ளதாலும் இரத்த அழுத்தம் அதிகமாகக் காணப்படுவதாலும் மகிந்தரைக் காலையில் கொஞ்சத் தூரமாவது ஓடும்படி டாக்டர்கள் கூறியுள்ளனராம். அதுக்கேன்ன அவர் வீட்டிலேயே ஜாக்கிங் மெசின் ஒன்றை வாங்கி ஓடலாம் தானே என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் மகிந்தெரோ அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா ரேஞ்சுக்கு தன்னை நினைத்துவைத்திருக்கிறார்.
அமெரிக்க ஜனாதிபது ஓபாமா காலையில் எழுந்து ஓடுவதைப் போல இவரும் ஓடுவது தற்போது வழக்கமாகிவிட்டதாம். அவர் ஓட அவர் பின் காவலாளிகளும் ஓட இப்படியே காலிக் கடல் முகத்தூவாரத்தில் இவர்கள் ஓடிவிளையாடுகிறார்கள்.
இதேபோல நேற்றுக் காலையும் மகிந்தர் ஓட ஆரம்பித்துள்ளார். அதே நேரம் அங்கே பாதை எங்கு பார்த்தாலும் குப்பைகளும் அழுக்குப் பைகளும் மற்றும் மட்டைகளும் காணப்பட்டுள்ளது.
மகிந்தர் வழமையாக ஓடும் பாதையில் இவ்வாறு குப்பை கூழங்கள் காணப்படுவது மாத்திரமல்லாது நாய்கள் செய்துவைத்த திருக்கோலங்களும் (ஜாங்கிரிகளும்) கொட்டிக் கிடந்துள்ளது. அதனை அவர் மிதித்தாரோ என்னமோ தெரியவில்லை ஆனால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அங்கே வரவழைத்து குப்பைகளைக் காட்டி திட்டித் தீத்தாராம்.
உடனடியாக அவற்றைச் சுத்தம்செய்யுமாறு கத்தியுள்ளார். நடந்தது என்னவென்று சுதாரித்துக்கொண்ட அதிகாரிகள் மகிந்தரை சமாதானப்படுத்தி வேறுபாதையில் ஓடவிட்டுள்ளனர். இருந்தாலும் அப்பாதையின் பாதுகாப்புக் குறித்து காவலாளிகள் பெருங்சங்கடத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
மகிந்தர் ஓடி முடித்தபின்னர்தான் அவர்களுக்கு உயிர் வந்ததாம். நல்லவர்கள் செல்லும் பாதை நன்றாக இருக்கும் மகிந்தர் செல்லும் பாதை இப்படித்தானே இருக்கும்!




அதிர்வு



inam inathodu
ஓடிப்பழகடா சிங்களக்காடையனே, தமிழர்கள் துரத்தும்போது நீ தப்பியோடப்பயன்படும் .