Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பா‌கி‌‌ஸ்தா‌னி‌ல் ‌தீ‌‌விரவா‌திக‌ள் நட‌த்‌திய வெடிகு‌ண்டுத் தா‌க்குத‌‌லி‌ல் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியாகியுள்ளதோடு 15‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் படுகாய‌‌ம் அடை‌ந்தன‌ர்.

பாகிஸ்தான் தோர்கர் மாவட்டத்தில் ஜுத்பா என்ற இடத்தில் உள்ள பொலிஸ்நிலைய தலைமை அலுவலகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி முகாம் உள்ளது. அங்கு பயிற்சி முடித்த பொலிஸார் அபோதாபாத்தில் பணிக்காக 3 வாகனங்களில் அனுப்பப்பட்டனர்.

கடைசி வேன் ஷா டிரக் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது சாலையோர‌ம் மறைத்து வைத்திருந்த குண்டுகளை ரிமோட் கண்ட்ரோல் மூலம் தீவிரவாதிகள் வெடிக்க செய்தனர்.

இ‌தி‌ல் வேனில் பயணம் செய்த 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ப‌லியானா‌ர்க‌ள். 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப்அலி சர்தாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

0 Responses to பாகிஸ்தானில் வெடிகு‌ண்டுத் தா‌க்குதல் - 5 பொலிஸார் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com