திமுக செயற்குழு கூட்டம் சென்னையில் தொடங்கியது. திமுக தலைவர் கலைஞர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உள்பட கட்சியின் உயர்மட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து தமிழகம் முழுவதும் வரும் 12ஆம் தேதி திமுக சார்பில் உண்ணாவிரதம் நடைபெறும் என்றும், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 15ஆம் தேதி மனித சங்கலி போராட்டம் நடைபெறும் என்றும் செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
12ஆம் தேதி உண்ணாவிரதம்: 5 மாவட்டங்களில் மனித சங்கலி: திமுக செயற்குழுவில் முடிவு
பதிந்தவர்:
Anonymous
09 December 2011



0 Responses to 12ஆம் தேதி உண்ணாவிரதம்: 5 மாவட்டங்களில் மனித சங்கலி: திமுக செயற்குழுவில் முடிவு