Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தானே புயல் நிவாரண நிதியாக, நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 இலட்சத்தை நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரிடையாக சந்தித்து கையளித்தார்.

கடந்த டிசம்பர் 30ம் திகதி தமிழகத்தை தாக்கிய தானே புயலால், கடலூர், புதுச்சேரி பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்திருந்தன. இப்புயலால் பாதிக்கபப்ட்ட மக்களுக்காக தொழிலதிபர்கள், முன்னணி பிரபலங்கள் பலர் தமிழக முதல்வரிடம் நிவாரண நிதி உதவி வழங்கிவந்தனர். எனினும் ரஜினி, கமல் போன்ற தமிழக முன்னணி நடிகர்கள் எவரும் நிவாரண உதவி வழங்கவில்லை எனவும், தென்னிந்திய நடிகர்கள் இந்த விடயத்தில் அக்கறையில்லாது இருப்பது ஏன் எனவும் இயக்குனர் தங்கர் பச்சான் அண்மையில் காரசாரமாக தாக்கி கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், நேற்று அரசு தலைமை செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 இலட்சத்துக்கான காசோலையை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையில்

மேலும் இது தொடர்பான செய்தி அறிய... - இங்கே அழுத்தவும்.

மருத்துவமனையில் நான் உடல்நலமின்றி இருந்த போது, முதல்வர் ஜெயலலிதா நலம் விசாரித்தார்.

அதற்காக மரியாதை நிமித்தமாக முதல்வரைச் சந்தித்தேன். மேலும் தமிழகத்தில் தானே புயலால் அதிகமான மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை இழந்துள்ளனர். அவர்களுக்காக தமிழக அரசு, மீட்பு பணிகளை மேற்கொண்டாலும் என்னால் இயன்ற வரை புயல் நிவாரணத்துக்காக ரூ.10 லட்சம் அளித்தேன் என்றார்.

வேறு ஏதும் பேசினீர்களா என கேட்ட போது வேறு முக்கியமாக எதுவும் பேசவில்லை என்றார். ரசிகர்களுக்கு ஏதும் சொல்லவிரும்புகிறீர்களா என கேட்ட போது விரைவில் படப்பிடிப்பு தொடங்கும். விரைவில் நடிப்பேன் என்றார். கடந்த வருடம் 'ராணா' படப்பிடிப்பின் போது உடல் நலம் பாதிக்கப்பட்ட ரஜினிகாந்த் சென்னை மருத்துவமனை, சிங்கப்பூர் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவருடைய மகள் சவுந்தர்யா இயக்கும் கோச்சடையான் படத்தில் நடிக்க தயாராகிவருவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to தமிழக முதல்வரை சந்தித்தார் ரஜினிகாந்த் - புயல் நிவாரண உதவி கையளிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com