தமிழ்நாட்டுக்கு வரும் இலங்கை அமைச்சர்கள் மற்றும் உறவினர்களை கவனமாகப் பாதுகாக்குமாறு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிபர் மாளிகையில் 31.01.2012 அன்று வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்த ராஜபட்சே, தமிழ்நாட்டில் தனது அமைச்சர்கள் மற்றும் உறவினர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்தார்.
தனது உறவினரும், தொழிலதிபருமான திருக்குமார் நடேசன், அமைச்சர் நிருபமா ராஜபட்சேவை திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்துக்காகவே தாக்கப்பட்டார். அவர் ஒரு இந்து என்றும், வட பகுதியைச் சேர்ந்த தமிழர் என்றும் கூறினார்.
தமிழகம் வரும் உறவினர்களை பாதுகாக்க வேண்டும், ஜெயலலிதாவுக்கு ராஜபட்சே கோரிக்கை
பதிந்தவர்:
தம்பியன்
01 February 2012



0 Responses to தமிழகம் வரும் உறவினர்களை பாதுகாக்க வேண்டும், ஜெயலலிதாவுக்கு ராஜபட்சே கோரிக்கை