Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ‘’விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தருவதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஒரு வீடு கட்ட ரூ.1 லட்சம் போதாது. கடலூரை விட விழுப்புரம் மாவட்டத்தில் குடிசை வீடுகள் அதிகம் உள்ளன. எனவே 2 மாவட்டங்களிலும் 1 லட்சம் வீடுகளை விட கூடுதலாக கான்கிரீட் வீடுகளை கட்டி குடிசை இல்லாத மாவட்டங்களாக்க வேண்டும்’’ என்று கூறினார்.

ஆளுங்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சகிப்பு தன்மையும் பொறுமையும் வேண்டும். அதைவிட எதிர்கட்சி உறுப்பினர்கள் சகிப்பு தன்மையும் பொறுமையும் அதிகம் இருக்க வேண்டும்.

ஸ்டூடியோவில் ஆக்ஷன் செய்வது, வசனம் பேசுவது போல் சட்டமன்றத்தில் பேசக் கூடாது. ஆக்கப்பூர்வமான யோசனைகளை சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் சொல்ல வேண்டும். ஆளுங்கட்சி உறுப்பினர்களை விட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும்’’ என்று கூறினார்.

0 Responses to சட்டசபையில் சினிமா வசனம் பேசக்கூடாது: ராமதாஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com