Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெர்மனியில் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட தபால் முத்திரையால் இலங்கைத் தூதரகம் மீண்டும் ஓடி அலைகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கனடா மற்றும் ஏனைய சில ஐரோப்பிய நாடுகளில் வெளியிடப்பட்ட தமிழீழ தேசியத் தலைவர் மற்றும் தமிழீழ தேசியச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட தபால் முத்திரைகள் போல் ஜெர்மனியிலும் கடந்த வாரம் கேணல் கிட்டு மற்றும் தியாகி முத்துக்குமார் அவர்களின் நினைவு நாளில் வெகு சிறப்பாக வெளியிடப்பட்டது.

தமிழர்கள் தமது தேசிய முத்திரைகளை வெளியிடுகிறார்கள் என்பதால் ஜெர்மனியில் மணிக்கற்கள் வியாபார நிறுவனம் ( Carl Faller Institute ) ஒன்று சிறிலங்காவின் மணிக்கற்கள் படங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள் வெளியிட்டு இலங்கை தபால் அமைச்சரிடமும் அன்பளித்தது.

இதை கண்ட இலங்கை தபால் அமைச்சர் (Jeevan Kumaratunga) ஜீவன் குமாரதுங்க , இலங்கையின் இறைமையை பாதிக்கும் வண்ணம் ஏனைய ஐரோப்பிய நாடுகளை போல் அல்லாது ஜெர்மன் அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரைகளை வெளியிட அனுமதி வழங்காமல் தமக்கு பெருமையை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

அத்தோடு Carl Faller Institute நிறுவனத்தின் இயக்குனர் யேர்மனியில் சிறிலங்காவின் இறைமையை பாதிக்கும் வண்ணம் முத்திரைகள் வெளியீடு செய்வதற்கு எவ்வித இடமும் கிடையாது என்பதையும் உறுதியளித்திருந்திருந்தார்.

இச்சம்பவங்களையடுத்து, ஜெர்மன் ஈழத்தமிழர்கள் தமது தேசியம் சார்ந்த முத்திரைகளை ஜெர்மன் தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளியிட்டு வைத்துள்ளனர்.

0 Responses to ஜெர்மனியில் தேசியத் தலைவரின் படம் பொறிக்கப்பட்ட தபால் முத்திரை வெளியீட்டால் ஓடித்திரியும் இலங்கைத் தூதரகம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com