Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாகிஸ்தானில் பழங்குடியின மக்களின் பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அமெரிக்காவின் ட்ரோன் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக லண்டனிலிருந்து இயங்கும் புலனாய்வு செய்திப் பணியகத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.

பழங்குடிமக்களின் உள்ளூர்க் கவுன்சில் கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தவர்கள் கூட கொல்லப்பட்டுள்ளதாக இந்த செய்தி கூறுகிறது.

தாக்குதல்களின் பின்னர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுகொண்டிருந்தவர்கள் மீதும் இரண்டாவது கட்டமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

லண்டன் புலனாய்வுச் செய்திப் பணியகம் குறிப்பான சம்பவங்களை சுட்டிக்காட்டி, அவற்றை நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலங்களுடன் இந்த புலனாய்வை நடத்தியிருக்கிறது.

இதேவேளை, அமெரிக்காவின் வான் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுவதை அதிபர் ஒபாமா அண்மையில் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமெரிக்க ட்ரோன் தாக்குதல்களில் பொதுமக்கள் கொலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com