Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் தமிழீழம் அமைவதே தி.மு.க. வின் விருப்பம் என்றும் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார். திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் சென்னை அம்பத்தூரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க.பொதுச் செயலாளர் பேராசிரியர் கா.அன்பழகன் நாட்டு மக்கள் சமவுரிமை பெற்று வாழ வழிவகுத்த இயக்கம், திராவிட இயக்கம், திராவிட இயக்க கொள்கை மற்றும் இலட்சியங்களை தி.மு.க. தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. இலங்கையில் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே தி.மு.க. வின் விருப்பம். தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் நடக்கும் டெசோ கூட்டத்தில் இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

உடனடியாக உத்தரவு போடும் இடத்தில் நாம் இல்லை. நமது வேண்டுகோளை இலங்கை அரசு மதிப்பதாக இல்லை. இந்திய அரசு நமக்கு அனுதாபம் காட்டுகிறது. அந்த அனுதாபத்தை பயன்படுத்தி எந்த அளவுக்கு நம்முடைய ஈழத் தமிழர்களை காப்பற்றலாமோ, பõதுகாக்க வழி செய்யலாமோ அதை செய்ய வேண்டும் என்பது தான் எங்களுடைய குறிக்கோளாக நோக்கமாக இருக்கிறது என்றார்.

0 Responses to தமிழீழம் அமைவதே தி.மு.க. வின் விருப்பம் பேராசிரியர் க. அன்பழகன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com