Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருவிழாவில் போலீஸ் கலவரம்!

பதிந்தவர்: தம்பியன் 23 July 2012

சேலம் நெய்க்காரப்பட்டியில் ஆடி பண்டிகையை முன்னிட்டு நடக்க இருந்த எருத்தாட்டத்தை உச்ச நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி சேலம் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தடுத்துள்ளது.

தங்கள் வழிபாட்டு உரிமையின் ஒரு வடிவமான இப்பண்பாட்டிற்கு தடை போட்டதால் கோபமான மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை பேச்சுவார்த்தைக்கு கோயில் மைதானத்திலேயே மாவட்ட ஆட்சியர் மகரபூசனம் அழைத்து நேரத்தை இழுத்தடிக்க, கடுப்பான மக்களோ எருதுகளை அவிழ்த்துவிட முயற்சிக்க அதன் பின் காவல்துறை செய்த தாக்குதல் தான் உங்கள் கண் முன்னே படங்களாக...

இவ்வளவு நடந்தும் சேலம் மாவட்ட எஸ்.பி அஸ்வினோ, 'எந்த தடியடியும் நடக்கவில்லை' என ஊடக, பத்தரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார். காவல்துறை தடியடி செய்து கொலை வெறி தாக்குதல் நடத்தினாரா இல்லையா? என்பதை நீங்களே பாருங்கள்...

0 Responses to திருவிழாவில் போலீஸ் கலவரம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com