Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் 24-04-2014 | Raasi Palan 24-04-2014

பதிந்தவர்: தம்பியன் 24 April 2014

மேஷம்
சிறப்பான நாள். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். பாராட்டும், புகழும் அதிகரிக்கும். நூதன பொருட்சேர்க்கை உண்டு.

ரிஷபம்
செவி குளிரும் செய்திகள் வந்து சேரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பாராத திடீர் லாபம் வந்து உங்களை திக்கு முக்காடச் செய்யும். வெளிவட்டார பழக்கம் விரிவடையும்.

மிதுனம்
உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். பேச்சு திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். அக்கம் பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனைவீர்கள். மகிழ்ச்சி பயணமொன்று உருவாகலாம்.

கடகம்
குழப்பங்கள் தீர குருவை வழிபட வேண்டிய நாள். நண்பர்கள் தொடர்பான சில காரியங்களுக்காக அலைய நேரிடலாம். வரவைக் காட்டிலும் செலவு கூடும். பயணத்தால் அலைச்சல் சற்று அதிகரிக்கும்.

சிம்மம்
கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். சொந்த பந்தங்களின் வருகை உண்டு. திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.

கன்னி
நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்பு செய்வர். ஆரோக்கியம் சீராகி ஆனந்தபடுத்தும். பெண் வழி பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

துலாம்
இன்பங்கள் இல்லம் தேடி வரும் நாள். பிள்ளைகளால் உதிரி வருமானம் வந்து சேரும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். சுற்றத்தாரின் வருகை உண்டு. உத்தியோக அனுகூலம் ஏற்படும்.

விருச்சகம்
வரவு திருப்தி தரும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். பொது வாழ்வில் புகழ் கூடும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். வாகன யோகம் உண்டு.

தனுசு
வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்த நடந்து கொள்வர்.

மகரம்
வருமானம் இருமடங்காகும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணி புரிவீர்கள். இறை வழிபாடு இனிமை சேர்க்கும். திருமண முயற்சி வெற்றி தரும்.

கும்பம்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வாங்கல்-கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற நண்பர்கள் கடைசி நேரத்தில் கை கொடுத்து உதவுவர்.

மீனம்
சுப விரயம் ஏற்படும் நாள். சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அலைச்சலுடன் கூடிய ஆதாயம் கிடைக்கும். தொழிலில் பணியாளர்களை மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும்.

0 Responses to இன்றைய ராசி பலன் 24-04-2014 | Raasi Palan 24-04-2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com