முகப்புத்தக காதலால் ஒரு மில்லியன் பெறுமதியான நகைகளை பறிகொடுத்த குடும்பமொன்று பற்றி தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் யாழ்நகரைச்சேர்ந்த யுவதியொருத்தியினை முகநூல் அறிமுகத்தினில் யாழ்ப்பாணம் தாவடி பகுதியினை சேர்ந்த இளைஞனொருவன் காதலித்துள்ளார்.காதலின் விளைவாக திருமணம் செய்வதாக கடந்த 15ம் திகதி தனதுவீட்டிலிருந்து வெளியேறிவந்து விட்டதாக கூறி இளைஞரின் வீட்டிற்கு வந்துள்ளார் குறித்த யுவதி. அங்கு சுமார் நான்கு நாட்கள் தங்கியிருந்தவர் ஜந்தாம் நாளன்று காதலனின் வீட்டார் அனைவருக்கும் மயக்க மருந்தினைத் தெளித்து விட்டுகாதலனின் தாயார் சகோதரர்களின் என மொத்தம் சுமார் ஒரு மில்லியன் பெறுமதியான நகைகளை களவாடிக்கொண்டு தப்பித்துள்ளார்.




0 Responses to முகப்புத்தக காதல்! பறிபோனது மில்லியன் தங்க நகை!