மலேசியாவிலிருந்து சீனாவுக்குப் புறப்பட்ட மலேசிய விமானம் காணமல் போய் இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது.
கடந்த மாதம் 8ம் திகதி மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனா நோக்கி 239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசியன் ஏர் லைன்ஸ் விமானம் புறப்பட்ட 45 நிமிடங்களுக்கு விமானக் கட்டுப்பாட்டு அறையின் ரேடார் கருவியிலிருந்து மாயமானது. இன்று ஒருமாதம் நிறைவடைகிற நிலையில், ஒரு மாதமாகியும் காணாமல் போன விமானம் குறித்த நிலையானத் தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் விமானத்தின் கறுப்புப் பெட்டியிலிருந்து சமிக்ஞை வருவதாகவும் தகவல் வெளியாகியது.
இருப்பினும் விமானத்தின் கறுப்புப் பெட்டியில் உள்ள பேட்டரிக்கு ஒரு மாத காலம் மட்டுமே இயங்கும் அவகாசம் உள்ளது என்பதால், இப்போது அப்போது என்று எப்போது வேண்டுமானாலும் பேட்டரியின் இயக்கம் செயலிழக்கக் கூடும் என்றும் அச்சம் நிலவுகிறது. இதை அடுத்து விமானத்தைத் தேடும் பணிகள் தொய்வடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




0 Responses to மலேசிய விமானம் காணாமல் போய் இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது!