இலங்கையில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் முஸ்லிம் மக்களை அடக்கியொடுக்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பொது பல சேனா என்கிற பௌத்த அடிப்படைவாத அமைப்பினைப் பயன்படுத்தி வந்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜெனீவாவில் இடம்பெறுகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது வருடாந்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் மத சுதந்திரத்திற்கான உப குழுக் கூட்டம் அதன் விசேட துதுவர் ஹைனர் பீல்ட்பெல்ட் தலைமையில் கடந்த வியாழக்கிழமை ஜெனீவாவில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிஸாம் காரியப்பர் இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டதுடன் முஸ்லிம்கள் மீதான பேரினவாத வன்முறைகள் எனும் கருப்பொருளில் உரையாற்றினார். இதன் போது 1915 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய இனக்கலவர தாக்குதல் சம்பவங்கள் மற்றும் 1956 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக ஆட்சியில் சிறுபான்மையினர் மீதான இன வன்முறைகள் குறித்த வரலாற்றுப் பதிவுகளை விபரித்த நிஸாம் காரியப்பர், 2011 ஆம் ஆண்டு தொடக்கம் முஸ்லிம்கள் மீது பேரினவாத சக்திகளினால் கட்டவிழ்த்து விடப்பட்ட இன ஒடுக்கல் வன்முறைகள் தொடர்பிலும் இனவாத, மதவாத இயக்கங்களின் பின்னணி தொடர்பிலும் விபரித்துக் கூறினார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பொது பல சேனா இயக்கத்தின் காலி பயிற்சி நிலையத்தை திறந்து வைத்தமை தொடக்கம் அளுத்கம சம்பவம் வரை முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளிலும் அவர் தொடர்புபட்டிருந்தார் எனவும் நிஸாம் காரியப்பர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் மியன்மாரில் முஸ்லிம்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த 696 இயக்கத்தின் தலைவரான விராதுவுடன் பொது பல சேனாவுக்கு இருந்து வருகின்ற இறுக்கமான உறவு குறித்தும் அவரை இலங்கைக்கு அழைத்து வந்து முஸ்லிம்களுக்கு எதிரான மாநாட்டில் பங்குபற்றச் செய்தமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் நிஸாம் காரியப்பர் எடுத்துக்கூறினார்.
பொதுவாக பொது பல சேனா உள்ளிட்ட பேரினவாத இயக்கங்களின் முஸ்லிம் விரோத இன ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ராஜபக்ஷ அரசாங்கம் மறைமுகமாக அனுசரணை வழங்கி வந்தது என்றும் அதனால் அப்பேரின இயக்கங்களினால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பாரிய வன்முறைகளைக் கூட கட்டுப் படுத்துவதற்கோ சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கோ அரசாங்கம் முன்வரவில்லை என்றும் குறிப்பிட்டு அவர் தனது கவலையை வெளியிட்டார்.
எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அப்போது இலங்கை அரசாங்கத்தில் நீதி அமைச்சராக பதவி வகித்த போதிலும் இந்த அநியாயங்களுக்காக முஸ்லிம்களுக்கு அவரால் நீதி வழங்க முடியாத துரதிர்ஷ்ட நிலை காணப்பட்டது. இது குறித்து அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றியதையும் நிஸாம் காரியப்பபர் நினைவூட்டினார். தற்போது நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து அவ்வியக்கங்கள் அமைதியாக இருந்தாலும் கூட எதிர்காலங்களில் அவை மீண்டும் தலை துக்கமாட்டா என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.
ஆகையினால் இவற்றை நிரந்தரமாக முழுமையாக கட்டுப்படுத்துவதற்கும் நடந்த சம்பவங்களுக்காக நீதியை பெற்றுக்கொடுப்பதற்காகவும் சர்வதேச மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என நிஸாம் காரியப்பர் வலியுறுத்தினார்.
ஜெனீவாவில் இடம்பெறுகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது வருடாந்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் மத சுதந்திரத்திற்கான உப குழுக் கூட்டம் அதன் விசேட துதுவர் ஹைனர் பீல்ட்பெல்ட் தலைமையில் கடந்த வியாழக்கிழமை ஜெனீவாவில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிஸாம் காரியப்பர் இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டதுடன் முஸ்லிம்கள் மீதான பேரினவாத வன்முறைகள் எனும் கருப்பொருளில் உரையாற்றினார். இதன் போது 1915 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய இனக்கலவர தாக்குதல் சம்பவங்கள் மற்றும் 1956 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக ஆட்சியில் சிறுபான்மையினர் மீதான இன வன்முறைகள் குறித்த வரலாற்றுப் பதிவுகளை விபரித்த நிஸாம் காரியப்பர், 2011 ஆம் ஆண்டு தொடக்கம் முஸ்லிம்கள் மீது பேரினவாத சக்திகளினால் கட்டவிழ்த்து விடப்பட்ட இன ஒடுக்கல் வன்முறைகள் தொடர்பிலும் இனவாத, மதவாத இயக்கங்களின் பின்னணி தொடர்பிலும் விபரித்துக் கூறினார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பொது பல சேனா இயக்கத்தின் காலி பயிற்சி நிலையத்தை திறந்து வைத்தமை தொடக்கம் அளுத்கம சம்பவம் வரை முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளிலும் அவர் தொடர்புபட்டிருந்தார் எனவும் நிஸாம் காரியப்பர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் மியன்மாரில் முஸ்லிம்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த 696 இயக்கத்தின் தலைவரான விராதுவுடன் பொது பல சேனாவுக்கு இருந்து வருகின்ற இறுக்கமான உறவு குறித்தும் அவரை இலங்கைக்கு அழைத்து வந்து முஸ்லிம்களுக்கு எதிரான மாநாட்டில் பங்குபற்றச் செய்தமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் நிஸாம் காரியப்பர் எடுத்துக்கூறினார்.
பொதுவாக பொது பல சேனா உள்ளிட்ட பேரினவாத இயக்கங்களின் முஸ்லிம் விரோத இன ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ராஜபக்ஷ அரசாங்கம் மறைமுகமாக அனுசரணை வழங்கி வந்தது என்றும் அதனால் அப்பேரின இயக்கங்களினால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பாரிய வன்முறைகளைக் கூட கட்டுப் படுத்துவதற்கோ சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கோ அரசாங்கம் முன்வரவில்லை என்றும் குறிப்பிட்டு அவர் தனது கவலையை வெளியிட்டார்.
எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அப்போது இலங்கை அரசாங்கத்தில் நீதி அமைச்சராக பதவி வகித்த போதிலும் இந்த அநியாயங்களுக்காக முஸ்லிம்களுக்கு அவரால் நீதி வழங்க முடியாத துரதிர்ஷ்ட நிலை காணப்பட்டது. இது குறித்து அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றியதையும் நிஸாம் காரியப்பபர் நினைவூட்டினார். தற்போது நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து அவ்வியக்கங்கள் அமைதியாக இருந்தாலும் கூட எதிர்காலங்களில் அவை மீண்டும் தலை துக்கமாட்டா என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.
ஆகையினால் இவற்றை நிரந்தரமாக முழுமையாக கட்டுப்படுத்துவதற்கும் நடந்த சம்பவங்களுக்காக நீதியை பெற்றுக்கொடுப்பதற்காகவும் சர்வதேச மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என நிஸாம் காரியப்பர் வலியுறுத்தினார்.




0 Responses to முஸ்லிம்களை அடக்கியொடுக்க மஹிந்த அரசாங்கம் பொது பல சேனாவை பயன்படுத்தியது: நிஸாம் காரியப்பர்