Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் மன்னிப்புக் கேட்கும்வரைப் போராட்டம் தொடரும் என்று பாஜக தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பை கொச்சையாக இ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்தார் என்று அதிமுக தொண்டர்கள் சென்னை உட்பட தமிழகம் எங்கும் நேற்று பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று முதல் தமிழகம் எங்கும் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் மன்னிப்புக் கேட்கும் வரை போராட்டம் தொடரும் என்று பாஜக அறிவித்துள்ளது.

இதற்கிடையில் இன்று தமிழக முதல்வர் சார்பில் இளங்கோவன் மீது அவதூறு வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடரப்பட்டு உள்ளது.செய்தியை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் மீதும் அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Responses to இ.வி.கே.எஸ்.இளங்கோவன் மன்னிப்புக் கேட்கும்வரைப் போராட்டம்: பாஜக

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com