Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களாகிய நாம் இந்த நாட்டில் இரண்டாம் தரப் பிரஜைகளாக வாழ விரும்பவில்லை. பிரிக்கப்படாத- பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் சம அந்தஸ்துடன் வாழவே விரும்புகின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

“சுய உரிமை, சுய மரியாதை, பாதுகாப்பு என்பவற்றை நியாயமான முறையில் பெற்றுக் கொள்ள விரும்புகின்றோம். தமிழ் மக்களாகிய நாம் தனித்த தேசிய இனம் என்பதை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய காலம் வந்துள்ளது“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை சம்பூர் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் 234 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to நாம் இரண்டாம் தரப் பிரஜைகளாக வாழ விருப்பவில்லை; மைத்திரி முன்னிலையில் சம்பந்தன் தெரிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com