புனித பாப்பரசர் பிரான்ஸிஸூக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு வத்திக்கானில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, இலங்கைக்கு தான் விஜயம் செய்திருந்தபோது தனக்கு வழங்கப்பட்ட வரவேற்பு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்ட பாப்பரசர், இலங்கை உபசரிப்பும் நற்புறவும் நிறைந்த மக்களையும், இயற்கை அழகையும் கொண்ட ஒரு வளமான நாடு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஐக்கியம் மற்றும் சகவாழ்வுக்காக ஜனாதிபதி முன்னெடுத்துச் செல்லும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தனது மகிழ்ச்சியை வெளியிட்ட பாப்பரசர், உலகில் இன்று இடம்பெறும் காலநிலை மாற்றத்தை தவிர்ப்பதற்கு சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினார்.
ஆயுத உற்பத்தியை தவிர்த்தல், உலகில் யுத்தம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை தவிர்த்தல் என்பவற்றுக்காக எடுக்கப்பட வேண்டிய பொருத்தமான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்திய பாப்பரசர், சமாதானத்திற்காக அர்ப்பணத்துடன் செயற்பட்ட ஒரு தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் ஒரு நெருக்கமான அன்பை தனது உள்ளத்தில் உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தேசிய ஐக்கியம் மற்றும் சகவாழ்வுக்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு பாப்பரசரின் ஆசீர்வாதம் ஒரு பெரும் பலம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையின் கத்தோலிக்க மக்கள் மட்டுமன்றி ஏனைய சகல சமய பக்தர்கள் மத்தியிலும் பாப்பரசர் குறித்த ஒரு பெரும் மதிப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சமாதானத்திற்கும் ஐக்கியத்திற்கும் அர்ப்பணித்த ஒரு தலைவராக தான் பார்ப்பதாகவும் குறிப்பிட்ட பாப்பரசர், சமாதானம் ஐக்கியத்தை அர்த்தப்படுத்தும் ஒரு விசேட நினைவுச் சின்னத்தையும், சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நீதி தொடர்பில் பாப்பரசரினால் வெளியிடப்பட்ட ஒரு நூலும் பாப்பரசரினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.
புனித பாப்பரசர் பிரான்ஸிஸின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரச தூத்துக்குழு இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு வத்திக்கான் சென்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, இலங்கைக்கு தான் விஜயம் செய்திருந்தபோது தனக்கு வழங்கப்பட்ட வரவேற்பு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்ட பாப்பரசர், இலங்கை உபசரிப்பும் நற்புறவும் நிறைந்த மக்களையும், இயற்கை அழகையும் கொண்ட ஒரு வளமான நாடு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஐக்கியம் மற்றும் சகவாழ்வுக்காக ஜனாதிபதி முன்னெடுத்துச் செல்லும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தனது மகிழ்ச்சியை வெளியிட்ட பாப்பரசர், உலகில் இன்று இடம்பெறும் காலநிலை மாற்றத்தை தவிர்ப்பதற்கு சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினார்.
ஆயுத உற்பத்தியை தவிர்த்தல், உலகில் யுத்தம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை தவிர்த்தல் என்பவற்றுக்காக எடுக்கப்பட வேண்டிய பொருத்தமான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்திய பாப்பரசர், சமாதானத்திற்காக அர்ப்பணத்துடன் செயற்பட்ட ஒரு தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் ஒரு நெருக்கமான அன்பை தனது உள்ளத்தில் உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தேசிய ஐக்கியம் மற்றும் சகவாழ்வுக்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு பாப்பரசரின் ஆசீர்வாதம் ஒரு பெரும் பலம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையின் கத்தோலிக்க மக்கள் மட்டுமன்றி ஏனைய சகல சமய பக்தர்கள் மத்தியிலும் பாப்பரசர் குறித்த ஒரு பெரும் மதிப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சமாதானத்திற்கும் ஐக்கியத்திற்கும் அர்ப்பணித்த ஒரு தலைவராக தான் பார்ப்பதாகவும் குறிப்பிட்ட பாப்பரசர், சமாதானம் ஐக்கியத்தை அர்த்தப்படுத்தும் ஒரு விசேட நினைவுச் சின்னத்தையும், சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நீதி தொடர்பில் பாப்பரசரினால் வெளியிடப்பட்ட ஒரு நூலும் பாப்பரசரினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.
புனித பாப்பரசர் பிரான்ஸிஸின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரச தூத்துக்குழு இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு வத்திக்கான் சென்றுள்ளது.
0 Responses to வத்திக்கானில் பாப்பரசர்- மைத்திரி சந்திப்பு!