Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சர்வதேச சமூகத்திடம் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை இன்னமும் நிறைவேற்றவில்லை என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஹூகோஸ் ஸ்வைர் அங்கு வைத்து அளித்துள்ள பேட்டியொன்றிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சர்வதேச சமூகத்துக்கு அளித்த வாக்குறுதிகளை இன்னும் சரியாக நிறைவேற்றவில்லை. ஆயினும், இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் சர்வதேச சமூகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பிரித்தானியா ஆதரவு வழங்கும்.” என்றுள்ளார்.

0 Responses to சர்வதேசத்திடம் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை இன்னமும் நிறைவேற்றவில்லை: பிரித்தானியா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com