பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கைக் கிரிக்கெட் அணி மீது 2009ஆம் ஆண்டு தாக்குதல் நடத்திய ஆயுததாரிகளில், 4 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மனாவ என்ற பிரதேசத்தில் பொலிஸாருக்கும்- ஆயுததாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 7 ஆயுததாரிகள் பொலிஸாருடன் மோதியதாகவும் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது இடம்பெற்ற தாக்குதலில் 9 பேர் காயமடைந்திருந்தனர். லாகூர் நகரில் உள்ள கடாபி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவிருந்த போட்டியில் பங்கேற்கச் சென்ற இலங்கை கிரிக்கெட் அணி மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மனாவ என்ற பிரதேசத்தில் பொலிஸாருக்கும்- ஆயுததாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 7 ஆயுததாரிகள் பொலிஸாருடன் மோதியதாகவும் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது இடம்பெற்ற தாக்குதலில் 9 பேர் காயமடைந்திருந்தனர். லாகூர் நகரில் உள்ள கடாபி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவிருந்த போட்டியில் பங்கேற்கச் சென்ற இலங்கை கிரிக்கெட் அணி மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.




0 Responses to இலங்கைக் கிரிக்கெட் அணி மீதான தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை!