Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இழக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிர்களின் தியாகத்தை இளைய தலைமுறை மறந்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ். இந்துக் கல்லூரியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளதாவது, “ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் எமது சமூகம் பல முக்கிய விடயங்களை மெல்ல மெல்ல மறந்து வருகின்றது. எமது மக்களிடம் ஓர் விடுதலைப் போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் தியாகம் செய்யப்பட்டன, பல மக்கள் அங்கவீனர்களாயினர் என்பதனை எமது இளம் சமுதாயம் மறந்து விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to விடுதலைப் போராட்டத்தில் இழக்கப்பட்ட உயிர்களின் தியாகத்தை இளைய தலைமுறை மறந்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது..

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com