Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை காலை இலட்சக்கணக்கான பக்தர்களின் ‘அரோகரா’ கோசம் வானைப் பிளக்க இடம்பெற்றது. 

இன்று காலை 07.00 மணிக்கு தேரில் ஏறிய முருகப்பெருமான், பக்தர்களுக்கு அருள் பாலித்து சந்நிதானம்  அமர்ந்தார்.

கடந்த மாதம் 11ஆம் திகதி கொடி ஏற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த உற்சவத்தில் நேற்று 23ஆம் நாள் சப்பரத் திருவிழா இடம்பெற்றதுடன், இன்று தேர்த் திருவிழாவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. நாளை தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது.

0 Responses to ஓங்கி ஒலித்த ‘அரோகரா’ கோசத்துக்கு மத்தியில் நல்லூரான் தேரில் வலம் வந்து ஆசி வழங்கினான்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com