Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் நல்லிணக்கப் பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு எந்தவிதமான கால வரையறையையும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் விதிக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நீண்ட காலமாக நீடித்த யுத்தத்தில் இருந்து மீளுவதற்கு கால அவகாசம் தேவை. ஆகவே அதற்கான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று பான் கீ மூனிடம் கேட்டுக் கொண்டதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது.

0 Responses to நல்லிணக்கப் பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு கால வரையறை எதனையும் பான் கீ மூன் விதிக்கவில்லை: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com