ஜல்லிக்கட்டுக்காக சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ச்சியாக ஆதரவுக் குரல் கொடுத்து வருபவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு. தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன்னெழுச்சியாக போராட்டம் நடந்துவரும் நிலையில், 'ஜல்லிக்கட்டுக்கு ஒரே தீர்வு, அவசரச் சட்டம் இயற்றுவதே' என்று கூறியுள்ளார்.
இது பற்றி அவர், 'ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வரை, மத்திய அரசு அவசரச் சட்டத்தை இயற்ற முடியாது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றது. அது தவறானது. ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, அது குறித்து அவசரச் சட்டம் இயற்றப்பட்ட வரலாறு இருக்கிறது.
இப்போது ஜல்லிக்கட்டை கொண்டு வருவதற்கு ஒரே வழி பிரதமரின் பரிந்துரையில் ஜனாதிபதி அவசரச் சட்டத்துக்கு கையொப்பம் இடுவதே. நாடாளுமன்றத்தின் மூலம் ஒரு சட்டம் அமல்படுத்தப்பட்டால் இருக்கும் அனைத்து உரிமைகளும் அவசரச் சட்டத்திற்கும் உண்டு.' என்று கூறியுள்ளார்.
இது பற்றி அவர், 'ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வரை, மத்திய அரசு அவசரச் சட்டத்தை இயற்ற முடியாது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றது. அது தவறானது. ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, அது குறித்து அவசரச் சட்டம் இயற்றப்பட்ட வரலாறு இருக்கிறது.
இப்போது ஜல்லிக்கட்டை கொண்டு வருவதற்கு ஒரே வழி பிரதமரின் பரிந்துரையில் ஜனாதிபதி அவசரச் சட்டத்துக்கு கையொப்பம் இடுவதே. நாடாளுமன்றத்தின் மூலம் ஒரு சட்டம் அமல்படுத்தப்பட்டால் இருக்கும் அனைத்து உரிமைகளும் அவசரச் சட்டத்திற்கும் உண்டு.' என்று கூறியுள்ளார்.




0 Responses to ஜல்லிக்கட்டு: அவசரச் சட்டம்தான் ஒரே தீர்வு என்று மார்கண்டேய கட்ஜு தெரிவிப்பு!