Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்களும் வன்கொடுமைகளும் இன்னமும் தொடர்வது வேதனையளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில்,

தமிழகம் முழுவதும் சில சமூக விரோத சக்திகள் காரணம் இல்லாமல் விடுதலைச் சிறுத்தைகளின் மீது தாக்குதல் நடத்துவது மிகுந்த
வேதனைக்குரியதாக உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கண்டமங்கலம் ஒன்றியம் அருகே சதீஷ் என்ற இளைஞர் சந்தேகத்திற்கு இடமான முறையில் தீக்காயம்பட்டு உயிரிழந்திருக்கிறார். அவர் இறப்பதற்கு முன்பு தந்த வாக்குமூலத்தில் தன்னை இரண்டு பேர் மின் கம்பத்தில் கட்டிவைத்தார்கள், தன் உடல் மீது ஏதோ திரவத்தை ஊற்றி தீ வைத்தார்கள் என்று கூறிருக்கிறார். ஆனால் காவல் துறையினர் அதனை 174 Crpc கீழ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறது. கொலை வழக்காக அதை பதிவு செய்ய தயாராக இல்லை.

அதே போல் கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியம் மாபுடையூர் கிராமத்தில் 14 வயது தலித் சிறுமி கடத்தப்பட்டு கருப்பங்கொல்லையில் வைத்து பாலியில் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார். இதுவரையில் ஒரேயொரு நபர்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதில் 5 பேர் சம்மந்தபட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் தலித் பெண் புகார் கூறியும் கூட மூன்று பேர்தான் என்று காவல் துறை திரும்ப திரும்ப வலியுறுத்துவதாகவும், அதிலே ஒருவரை மட்டுமே கைது செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் வன்கொடுமைகள் தொடர்கிறது, நீடிக்கிறது என்பது வேதனை அளிக்கிறது.என்று குறிப்பிட்டு உள்ளார்.

0 Responses to தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்களும், வன்கொடுமைகளும் தொடர்வது வேதனையளிக்கிறது: திருமா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com