Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மக்களாட்சி என்பது ஒரு இனிய சொல். உலகின் பெரும் பகுதிகளில் மக்களாட்சி என்பது அடக்கு முறையாளர்களின் போலிப் போர்வையே. உலகின் பல நாடுகளின் அடக்குமுறை ஆட்சியாளர்கள் ஒழுங்காக தேர்தல் நடந்தி முறைப்படி தேர்ந்தெடுக்கப் பட்டவர்களே. ஜேர்மனியின் ஹிட்லர் கூட மக்களாட்சி முறைப்படி தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவர். ஒழுங்காகத் தேர்தல் நடத்தப் படாமல் தேர்தெடுக்கப்படும் அரசுகளும் உண்டு. பெரும்பாலான அரசுகள்பொய்யான வாக்குறுதிகளாலும் ஊடகங்களால் தவறான வழிநடத்தல்களாலும் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. தன்னை மக்களாட்சி நாடெனக் கூறும் அமெரிக்காவில் தங்கள் வாக்குக்கல் கணக்கில் எடுக்கப் படுவதில்லை என பல இலட்சக் கணக்கான மக்கள் குறை கூறுவது உண்டு.
சுதந்திரமாக மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லாத இடத்தில் தேர்தல் நடத்துவதால் என்ன பயடும் இல்லை.

யாழ்ப்பாண மாநகரத் தேர்தலை ஒட்டி நடாத்தப் பட்ட கருத்துக் கணிப்பு வாக்களிப்பில் தேர்தலில் வாக்களிபீர்களா என்ற கேள்விக்கு 85% மக்கள் பதிலளிக்கவில்லை! இந்நிலையில் வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப் படுகின்றன. தேர்தல் நடாத்தும் சூழ்நிலை இல்லாப் பகுதியில் தேர்தல் தேவையா?

0 Responses to யாழ் தேர்தல்: சுதந்திரமும் மக்களாட்சியும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com