தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நிருபர்களிடம், இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை இந்தியப்பிரதமர் மன் மோகன் சிங்கை சந்தித்துப் பேசுவர் தெரிவித்தார்.
இளைஞர்களை காங்கிரஸ் கட்சியில் சேர்க்கும் பணி தொடர்பில் தென் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இந்தத்தகவலை தெரிவித்தார். இது குறித்து மேலும் கூறுகையில், நாளை 22 ஆம் திகதி தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க, காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து உரையாடவுள்ளனர். இதல் முக்கியமாக இலங்கையில் முகாம்களிலுள்ள தமிழாகளின் நிலை,மற்றும் தமிழக மீனவர்கள் மீது சிறீலங்கா கடற்படையின் தாக்குதல்கள் என்பவை தொடர்பில் இங்கு ஆராயப்படும் என்றார்.
இலங்கைத் தமிழர் விவகாரம் பிரதமர் மன்மோகனுடன் நாளை தி.மு.க.,காங்கிரஸ் பேச்சாம்!
பதிந்தவர்:
தம்பியன்
21 September 2009



0 Responses to இலங்கைத் தமிழர் விவகாரம் பிரதமர் மன்மோகனுடன் நாளை தி.மு.க.,காங்கிரஸ் பேச்சாம்!