Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரவுள்ள அரச தலைவர் தேர்தலில் மகிந்தவுக்கு வாக்களிக்குமாறு தமக்கு கீழுள்ள படைவீரர்களை கேட்டுக்கொள்ளுமாறு விசேட அதிரடிப்படைகளின் கட்டளை அதிகாரி தனது படைநிலை அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்துள்ள துண்டுப்பிரசுரம் தெரிவிக்கிறது.

டிசம்பர் மாதம் 9 ஆம் திகதியிடப்பட்ட இத்துண்டுபிரசுரம் தொடர்பாக விசேட அதிரடிப்படை கட்டளையதிகாரி சரத் சந்திராவிடம் கேட்டபோது அவ்வாறான ஒரு விடயம் பற்றி தான் அறிந்திருக்கவில்லையென தெரிவித்தார். தான் அவ்வாறான துண்டுப்பிரசுத்தை கண்டிருக்கவில்லையெனவும் தெரிவித்தார்.

ஆனால் அத்துண்டுப்பிரசுரத்தின் முத்திரையிடப்பட்ட நகல் பிரதியொன்றை அவரிடம் காட்டப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்எவரேனும் எமது படைப்பிரிவின் பொய் முத்திரையிட்டு துண்டுபிரசுரத்தை அனுப்பிவைத்திருக்கலாம்என தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பான முறைப்பாடு காவல்துறையினருக்கு சரத் பொன்சேகாவினால் வழங்கப்பட்டுள்ளது.

0 Responses to மகிந்தவுக்கு வாக்களிக்குமாறு எஸ்ரிஎப் கட்டளை அதிகாரி தனது படையினருக்கு அறிவுறுத்தல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com